கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசி

பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?

பறவை டாக்டர்

காட்டில் வாழும் எருமை, காண்டாமிருகம், முதலைக்கு உடம்பு சரியில்லை. நமக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம், மருந்து சாப்பிடுகிறோம். காட்டில் வாழும் உயிரினங்கள் யாரிடம் போகும்?

தாத்தா பூ எங்கே போகிறது

ஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?

வங்காரியின் பசுமைத் தூதுவர்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமாகவும், எளிய மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும் மக்களிடையே அமைதி நிலவச் செய்ய முடியும்.

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு

ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டால் சடாகோ சசாகி என்ற சிறுமி இரத்தப் புற்றுநோய்க்கு ஆளானாள். ஜப்பானியர்களின் நம்பிக்கையின்படி நீண்ட நாள் வாழ்வதற்காக ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்ய சடாகோ சசாகி முயல்கிறாள். அவளால் ஆயிரம் காகிதக் கொக்குகளை செய்ய முடிந்ததா? சடாகோ என்ன ஆனாள் என்பதே இந்த நிஜக்கதை.

உயரப் பறந்த சாலிம் அலி

சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும்.

இளையோருக்கு மார்க்ஸ் கதை

மார்க்ஸ் எனும் எளிய மனிதர், எப்படி தன் அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும் உலகின் மகத்தான மனிதராக ஆனார் என்பதை இப்புத்தகம் சொல்கிறது.

அன்பைத் தேடி…

புதிய நிலம் தேடி அவளுடைய குடும்பத்தினர் போனார்கள். புதிய ஊரில் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்கிற எதிர்பார்ப்புடன் பயணித்தார்கள்… அந்தப் பயணம் இனிதே முடிந்ததா?

1 2 4