எப்படி? எப்படி?

தினமணி சிறுவர்மணியில் வெளியான காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அன்றாட வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளின் பின்னணியல் பொதிந்திருக்கும் அறிவியல் அம்சங்களை எளிமையாக விளக்குகின்றன. முட்டை நீள்வட்டமாக இருப்பதற்கான காரணம் முதல், ஏ.டி.எம். எப்படி வேலை செய்கிறது என்பதுவரை இந்தப் புத்தகம் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது.

எல்லாம் தந்த மரம்

உலகப் புகழ்பெற்ற சூழலியல் கதை சொல்லம் நூலதான் எல்லாம் தந்த மரம் ஆகும். இதழாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய நூல். சூழலியல் குறித்து எளிமையாக அனைவருக்கும் புரியும்படி எழுதுவது இவரின் சிறப்பு.

எறும்புகள் ஈக்கள்

எறும்புகள்-ஈக்கள் பற்றி மிக எளிமையாக ஆச்சரியமான தகவல்கள் உடைய புத்தகம். எறும்பில்-ஈக்களில் இவ்வளவு ஆச்சரியங்கள் உள்ளனவா ? அறிவியல் பூர்வமாக எழுதப்பட்டுள்ள புத்தகம். உங்கள் வீட்டு சிறுவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ளவேண்டும்

ஐம்பூதம் – இயற்கையின் ஐந்து கொடைகள்

ஐம்பூதம் என்றழைக்கப்படும் இந்த இயற்கையின் கொடைகள், நமக்கு இவ்வளவு காலம் தந்துவருபவை என்ன? இந்த இயற்கை வளங்களை முக்கியத்துவத்தை உண்மையிலேயே நாம் உணர்ந்துகொண்டிருக்கிறோமா?

ஒரு கேமராவும் சில தவளைகளும்

‘மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு’ குறித்து நடைபெற்ற ஆய்வுக் குழுவில் இந்த நூலாசிரியரும் இடம்பெற்றிருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதிகளில் கண்டறியப்பட்ட புதிய தவளை வகைகள், தவளைகளின் வாழ்நிலை, காடு துண்டாதல், உயிரினங்கள் எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தல் உள்ளிட்ட அம்சங்களை, அவருடைய அனுபவங்கள் வழியாக விவரித்து ஒரு கானுலாவுக்கு இட்டுச் செல்கிறது இந்த நூல்.

ஓய்ந்திருக்கலாகாது

இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள்.சீர்கேடு மிகுந்த கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுதலும் முறையான பயிற்றுவித்தல் பறிற்சியும்,சமூக அக்கறையோடுகூடிய கல்வியுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும்.அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு.

ஓர் மழைக்காட்டின் பேரழிவு

அமேசான் காட்டின் உண்மை நிலையை இந்த சிறு புத்தகம் உணர்த்துகிறது. நவீன வர்த்தக நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே அமேசான் காடு அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

கடைசிப் பூ

பன்னிரண்டாவது போர் பத்தி உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அதில் மனித குல நாகரிகமும் பண்பாடும் ஒட்டுமொத்தமாக அழிந்து போயின. கிராமங்கள், நகரங்கள் எல்லாம் காணாமல் போயின. பயிர்நிலங்கள், காடுகள் துடைத்து அழிக்கப்பட்டன. பூங்காக்கள், தோட்டங்கள் எரிக்கப்பட்டன. அனைத்துக் கலைப்பொருட்களும் நொறுக்கப்பட்டன. எல்லாரும் படிக்க வேண்டிய கதை

1 2 3 6