இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள்.சீர்கேடு மிகுந்த கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுதலும் முறையான பயிற்றுவித்தல் பறிற்சியும்,சமூக அக்கறையோடுகூடிய கல்வியுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும்.அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு.
நீ கரடி என்று யார் சொன்னது?
ஒரு நாள் ஒரு கரடி விழித்து எழுந்தபோது, தான் ஒரு தொழிற்சாலை வளாகத்துக்குள்இருப்பதை உணர்கிறது. அங்கிருக்கும் அதிகாரிகளோ அதுவும் ஒரு தொழிற்சாலை ஊழியர்தான் என்று சொல்லி, அந்தக் கரடியும் அங்கே வேலைபார்க்க வேண்டுமென்று நெருக்கடி தருகிறார்கள். ‘தான் ஒரு காட்டுக் கரடி’ என்று அது மீண்டும் மீண்டும் சொன்னபிறகும், அதை அவர்கள்ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் அந்தக் கரடி தொழிற்சாலையில் வேலை பார்க்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து அது வேலை பார்த்ததா, அதற்குப் பிறகு அந்தக் கரடிக்கு நடந்தது என்ன?
Reviews
There are no reviews yet.