வெப்பமாவதில் இருந்து மனிதன் தன்னையும், தான் வாழும் உலகையும் காத்துக்கொள்வது எப்படி? சூழல்கேட்டினால் உருவாகியுள்ள அபாயத்தில் இருந்து மனிதகுலம் மீள்வது எப்படி? நம்மைக்காத்து வரும் இயற்கையைப் பாதுகாப்பது எப்படி? என பல்வேறு கேள்விகளுக்கு விடைசொல்கிறார் நூலாசிரியர். அடிப்படையில் பத்திரிகையாளரான ஆதி வள்ளியப்பன் சிறந்த சூழலியல் ஆர்வலர். நம் வாழும் சூழலை காப்பதற்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக கொதிக்கும் பூமியை சமூகப்பார்வையோடு படைத்திருக்கிறார்.
யாரங்கே பாடுவது?
காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?
Reviews
There are no reviews yet.